வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில், நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் கைப்பேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பேசி மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
