ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று (06) விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை புத்தளம் முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஒரு கிலோ 410 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.