இலங்கை அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை மீண்டும் சந்தித்து மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த வாரம், நிதி இராஜாங்க அமைச்சர், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் அடங்கிய குழு, IMF உடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்,
கடன் வழங்கும் நாடுகள் மற்றும் வணிக கடன் வழங்குபவர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னேற்றம் அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.