மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய போதிய டொலர்கள் இன்மையால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
வாராந்த டொலர் வழங்கலை இலங்கை மத்திய வங்கி உறுதி செய்துள்ளது.
போதுமான டொலர் கிடைக்கப்பெற்றதும் 100,000MT மசகு எண்ணெய் தரையிறக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.