Tuesday, December 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் மீண்டும் முதலீடு செய்ய சிங்கப்பூர் ஆர்வம்

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்ய சிங்கப்பூர் ஆர்வம்

சிங்கப்பூருடன் ஏற்படுத்திக்கொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) டோக்கியோவில் உறுதியளித்துள்ளார்.

மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றுள்ள, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்கப்பூர் மீண்டும் இலங்கையில் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles