Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுநீரக நோயாளர்களை பரிசோதிக்க நவீன பேருந்துகள்

சிறுநீரக நோயாளர்களை பரிசோதிக்க நவீன பேருந்துகள்

நீண்டகால சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விஞ்ஞான நிலையத்துடன் கூடிய எட்டு பேருந்துகளை இலங்கைக்கு வழங்க சீனா ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நன்கொடையின் பெறுமதி 660 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.

இலங்கையில் சிறுநீரக நோய் அதிகரித்துள்ள 8 மாவட்டங்களுக்கு இந்தப் பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.

அதன்படி, அனுராதபுரம், பொலனறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த பேருந்துகள் வழங்கப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles