அண்மையில் உத்தியோகபூர்வமாக எட்டப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டாலும், அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
“அதற்கு முன்னர் ஏனைய கடன் வழங்கிய நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடக்க வேண்டும், மேலும் அவர்களின் அறிக்கைகளும் சேர்க்கப்பட வேண்டும், அதுவரை அது யாராலும் தீர்மானிக்கப்படாது” என்று சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.