Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொழில் துறை மூலம் பொருளாதாரம் வலுப்பெற வேண்டும் - தொழில் அமைச்சர்

தொழில் துறை மூலம் பொருளாதாரம் வலுப்பெற வேண்டும் – தொழில் அமைச்சர்

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை அதன் அதிகபட்ச நிலைக்கு கொண்டு வர வேண்டும் என தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

கைத்தொழில் அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப் பெற செய்ய அனைத்து தொழில்துறையினரின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் அவர் கோரியுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்இ தற்போதைய மின்சாரம் மற்றும் எரிசக்தி நெருக்கடிஇ மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள தடைகள்இ அந்நிய செலாவணி பிரச்சினைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறை போன்ற பிற பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles