Tuesday, September 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு300 கிராம உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறவுள்ளனர்

300 கிராம உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறவுள்ளனர்

இந்த ஆண்டு (2022) டிசம்பர் 31 ஆம் திகதியுடன் சுமார் 300 கிராம உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதினான்காயிரத்து இருபத்தி இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் இருந்த போதிலும், தற்போது பதினோராயிரத்து எழுநூறு அதிகாரிகளே உள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அத்துல சிலமன் ஆரச்சி தெரிவித்தார்.

எனினும் இந்த வருடத்தில் கணிசமான எண்ணிக்கையிலான அதிகாரிகள் ஓய்வு பெறுவதால் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போதுள்ள பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதால், ஒரு கிராம அலுவலர் தனது சொந்தக் களம் மட்டுமின்றி வேறு பல களங்களிலும் பணிபுரிய வேண்டியுள்ளது.

அந்தப் பணிகளைச் செய்வதில் பெண் அலுவலர்கள் சிரமப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles