Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமில்கோ நிறுவன மோசடி தொடர்பில் விசாரணை அவசியம்

மில்கோ நிறுவன மோசடி தொடர்பில் விசாரணை அவசியம்

அம்பேவெல அரச பால் தொழிற்சாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் எரிபொருள் மோசடி தொடர்பில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேனுக்க பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேனுக்க பெரேரா இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இவ்வாறு முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மில்கோ நிறுவனத்தின் தலைவர் தனது முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே எரிபொருள் மோசடியானது இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேனுக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles