உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படாமை தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1ம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர உறுதியளித்தபடி விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.