இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மின்சார கட்டணம் செலுத்தாதவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ், நீண்டகாலமாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வீட்டு நுகர்வோர் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வட்டி, அபராதம் மற்றும் சில நிலுவைக் கட்டணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாதாந்த மின்கட்டணத்தை செலுத்தாததால், மாநிலத்தில் மின் விநியோகம் நெருக்கடியில் உள்ளதாகவும், மின் விநியோகத் துறையில் வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.