இருளால் சூழ்ந்த நாட்டுக்கு பெரும்பான்மையான பெண்களால் வெளிச்சத்தை கொண்டு வர முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற விசேட மக்கள் சேவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
25மூ பெண் பிரதிநிதித்துவம் கட்டாயம் இடம்பெற வேண்டியதொன்று.
தற்காலத்தில் பெண்கள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட கடுமையான பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
மனித வாழ்வில் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றில் பெரும் பங்கு வகிப்பது பெண்களே. அவர்கள் ஆற்றும் பங்கு அளவிட முடியாதது என அவர் மேலும் தெரிவித்தார்.