கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் தீக்கிரையான வீடுகளுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்காக 30 நாடாளுமன்ற உறுப்பினர்களே விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
74 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சேதம் மற்றும் தீக்கிரையாகியுள்ளன.
எனினும் அதில் 44 உறுப்பினர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனஅமைச்சர் பிரசன்ன ரணதுங்க குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.