ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நடிகை தமிதா அபேரத்ன நேற்று (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நடிகை தமிதா அபேரத்னவை விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று (08) ஆரம்பமான போது விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன தற்போது கோட்டை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (07) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.