Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு22 ஆவது திருத்தம் – உயர்நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

22 ஆவது திருத்தம் – உயர்நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

22 ஆவது திருத்தம் குறித்த உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்றில் இன்று அறிவித்தார்.

அதற்கமைய, 22 ஆவது திருச்சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானதாக உள்ளதென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவற்றை நிறைவேற்றுவதற்கு சாதாரண பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு வேண்டுமென உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பல தரப்பினர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்ததன் பின்னர், மனுக்களின் விசாரணையை நிறைவு செய்த குழாம், தனது முடிவுகளை சபாநாயகருக்கு சமர்பிப்பதாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி  அறிவித்தது. 

அதன்படி இன்று காலை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்தார்.

Keep exploring...

Related Articles