Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2,000 பேக்கரிகளுக்கு பூட்டு

2,000 பேக்கரிகளுக்கு பூட்டு

கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 7,000 பேக்கரிகளில் சுமார் 2,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பேக்கரிகள் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக 13,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோகிராம் மா மூடை, 20,000 ரூபா வரை கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தையில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு இறத்தல் பாண் 300 ரூபாவாக உயர்ந்துள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles