Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு''போராட்டத்தை கைவிட மாட்டோம்''

”போராட்டத்தை கைவிட மாட்டோம்”

தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு போதாது என தெரிவித்து எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக நேற்று (05) காலை போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.

நேற்றிரவு குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கியிருந்த சிறிய கூடாரத்தையும் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும்இ தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை அவ்விடத்தை விட்டு செல்லப் போவதில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles