Wednesday, April 15, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

களனி கங்கையில் தொடர்ந்தும் சிறியளவிலான வௌ்ள அபாய நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே அவதானமாக இருக்குமாறு களனி ஆற்றை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று காலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் நாட்டில் அதிகூடிய மழைவீழ்ச்சி புளத்கொஹூப்பிட்டியவில் பதிவாகியுள்ளது.

அங்கு 206 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நேற்று(05) காலை 8.30 மணி முதல் இன்று(06) காலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பகுதியில் 109.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பலத்த மழையினால் புளத்சிங்கள – மோல்காவ வீதி, வௌ்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles