எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான தீர்மானம் நிதியமைச்சிடம் கையளிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் இந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விற்பனையில் கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைக்கு இணையான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.