ராஜபக்ஷர்களால் இலங்கை திவாலானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்து நாளிதழுடனான கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நெருக்கடிகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கங்களும் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களால் ராஜபக்ஷர்கள் விரட்டியடிக்கப்பட்டமை தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.