அரசாங்க தரப்பிற்குள் இன்னமும் ஊழல் தலைதூக்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான விலைமானுக்கோரல் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டதாகவும், அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயின் தரம் குறைவாக இருப்பதாகவும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி பறிப்பு மற்றும் பிக்பாக்கெட் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.