நாடு முழுவதும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா, மத்தி, தென், சப்ரமகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும் ஆறுகளில் வௌ்ளம் ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.