பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றில் ஆற்றிய இடைக்கால பாதீட்டு உரையின்போதே ஜனாதிபதி இவ்வாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.