கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறு செய்தால் ஒரு சில பாரிய வர்த்தகர்களுக்கு நன்மை கிடைக்கும் எனவும் அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்இந்திரஜித் பெரேரா தெரிவித்தார்.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்களின் விலை அதிகரிப்பு நிச்சயமற்ற நிலைமையாக மாறியுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.