நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் வீட்டில் நான்கு மதுபான போத்தல்கள் மற்றும் டிராகன் லைட் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.