பாரிய மற்றும் சிறிய நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் விவசாய அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
நெல் விலை மற்றும் நெல் ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், பாரிய நெல் ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேனவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
டட்லி சிறிசேனவுக்கும் விவசாய அமைச்சின் செயலாளருக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதமும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து அரிசி கொண்டு வருவதை நிறுத்திவிட்டு, விவசாயத்துறை அமைச்சருக்கும், வர்த்தக அமைச்சருக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்தப்பட்டு செயல்பட வேண்டும் என நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இல்லையெனில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என டட்லி சிறிசேன சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் அதிகபட்ச விலைக்கு அரிசியை கொள்வனவு செய்வதாகவும், அதை விட அதிக விலைக்கு அரிசியை கொள்வனவு செய்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.