மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி மற்றும் பேருந்துகளை நாட்டின் போக்குவரத்தில் இணைப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஐக்கிய நாடுகளின் அபிருத்திக்கான வேலைத்திட்டத்துடன் போக்குரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த வருடத்துள் 300 முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் கட்டமைப்புக்கு மாற்றம் செய்யவும் அதற்கான முறைமை தயாரிப்பது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.