மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை இன்று (23) நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனுதாரர் தினியாவல பாலித தேரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, திருத்தப்பட்ட முறைப்பாடு இன்னும் தயாராகாத நிலையில், அதனை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் தேவை என தெரிவித்தார்.
அதன்படி எதர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், எதிர்மனுதாரரான அஜித் நிவார்ட் கப்ராலுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயணத்தடையை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்காததால், அந்த பயணத்தடையும் இன்று முதல் நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.