முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் இன்று (18) முற்பகல் அவர் கைதுசெய்ப்பட்டார்.
2007ஆம் ஆண்டு, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.