முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பும் திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது தனிப்பட்ட செயலாளர் சுகேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் நாம் வினவியபோது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பும் திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என சுகேஷ் பண்டார தெரிவித்தார்.