மின்வெட்டு அமுலாகும் நேரம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது.
முன்னர் 3 மணி நேரத்தில் இருந்து ஒரு மணித்தியாலமாகவும், பின்னர் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களாகவும் நேரம் மாற்றப்பட்டிருந்தது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பிரிவு செயலிழந்துள்ள நிலையில், தற்போது மின்சார துண்டிப்பு நேரத்தை 3 மணித்தியாலங்களாக CEB அதிகரித்துள்ளது.