நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பழுதடைந்துள்ள முதலாவது மின் பிறப்பாக்கியின் திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 14 – 16 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய மின்வெட்டு ஒரு மணித்தியாலம் இருபது நிமிடங்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும், நாளை (16) முதல் மின்வெட்டை நீடிக்க வேண்டியுள்ளதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.