லுணுகல பிரதேசத்தில் 14 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதனடிப்படையில் அவரது காதலன் எனக்கூறப்படும் நபரு (18), மற்றுமொரு நபரும் (53) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லுணுகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் சிறுமியை கடத்திச் சென்று எட்டு நாட்களாக உடகிருவை பாதுகாப்பு வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.