கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில்,டெங்கு மற்றும் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
51 பேர் டெங்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 11 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் எட்டு பேருக்கு தீவிர டெங்கு ஏற்பட்டுள்ளதுடன், 2 பேர் அதிதீவிர சிகிச்சையகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.