ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆரச்சியின் சகோதரர் நிஹால் வெதஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் தங்காலை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நிஹால் வெதஆரச்சி தென் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினராவார்.