முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தாய்லாந்தில் தற்காலிகமாகவே தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் பிரதமர் ப்ராயுட் ச்சான் ஓ ச்சா இந்த தகவலை வழங்கியுள்ளார்.
‘இது ஒரு மனிதாபிமான நெருக்கடி.அவருக்கு நாட்டில் அரசியல் செய்ய முடியாது.
நாங்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளோம். இதன் மூலம் கோட்டாபய இன்னொரு நாட்டில் அகதி அந்தஸ்தை பெற்றுக் கொள்ள முடியும்’ என தாய்லாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.