அடுத்த வாரம் முதல் வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டாவை / ஒதுக்கத்தை அதிகரிப்பதற்கான ஆலோசனை பெறப்பட்டு வருகிறது.
இதன்படி முழுநேரம் பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கோட்டாவை முதலில் அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் கோட்டாவின் அளவு குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.