16-20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பகுதி நேர வேலைகள் (Part time jobs) செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயாராகி வருகிறது.
தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை வாய்ப்புச் சூழலுக்குப் பயன்படுத்தப்படாமையால் தொழிலாளர் துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் குறித்த நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இந்த வயது வரம்புக்குட்பட்ட இளைஞர்கள் 20 மணி நேரம் பகுதி நேர வேலைகளைச் செய்யலாம்.
வேலைவாய்ப்புக்கு முன் முறையான பயிற்சி அளிப்பது கட்டாயமாகும்.
மேலும் புதிய சட்ட திருத்தத்தின்படிஇ பள்ளி வயது சிறார்களுக்கும் இந்த வாய்ப்பை பெற முடியும் என்றார்.