கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் இதனை தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி தொகை கிடைப்பதால், சந்தையில் அரிசி விற்பனை குறைந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் விலை குறையும் என்றும் அவர் கூறினார்.
