நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று சற்று குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மழை வீழ்ச்சி குறைவடையக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் 50 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.