இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
கம்போடியாவில் இடம்பெற்று வரும் ஆசியான் மற்றும் இந்திய அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்ற சென்றுள்ள நிலையில் இன்று இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே ஜெய்சங்கர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
சீனாவின் விஞ்ஞான கப்பல் இலங்கைக்கு வரும் நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முறுகல்களை தவிர்க்கும் ராஜதந்திர பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.