இலங்கை எதிர்நோக்கி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லெஸ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இதுவரை அடைந்துள்ள அபிவிருத்திகள் குறித்து இரு தரப்புக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு உறவுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டது