நேற்று (03) பிற்பகல் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வை ஆரம்பிக்கும் போது பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட விமானப்படையின் ஆளில்லா விமானம் தியவன்னா ஓயாவில் வீழ்ந்தது.
திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
விமானத்தை கண்டுபிடிப்பதற்காக கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.