இன்று (04) நள்ளிரவு முதல் பேருந்து சேவையில் இருந்து விலகுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பேருந்துகளுக்கான டீசல் 40 லீற்றராக மட்டுப்படுத்தப்பட்டதற்கு எதிராக தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவிடம் நாம் வினவினோம்.
சங்கம் என்ற ரீதியில் இந்த விடயம் தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் பிராந்திய ரீதியில் பேருந்துகள் ஏற்கனவே சேவையிலிருந்து விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயத்திற்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.