Tuesday, March 18, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

தேவையான அளவு அரிசி நாட்டில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய விதை இறக்குமதியாளர்கள் சங்கத்தினருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்த்தமையை விடவும் அதிக நெல் அறுவடை கிடைக்கிறது.

இந்த போகம் நிறைவடையும் போது வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு ஆலோசனை வழங்க முடியும்.

எதிர்காலத்தில் ஏற்படும் தேவைக்கு அமைய மாத்திரம் அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles