எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20 வீதத்தால் குறைக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, ரைஸ், கொத்து உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் குறையும் என அவர் வலியுறுத்தினார்.