Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி மாளிகையில் WiFi ஐ பயன்படுத்தியோரை தேடி விசாரணை

ஜனாதிபதி மாளிகையில் WiFi ஐ பயன்படுத்தியோரை தேடி விசாரணை

ஜனாதிபதி மாளிகையில் வைஃபையை (WiFi) பயன்படுத்தி இணையம் ஊடாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட பலர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்களில் ஆக்கிரமித்த போது, இணையவழி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, பொலிசார் இது தொடர்பான தொலைபேசி தரவுகளை ஆராய்ந்து வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சேதப்படுத்திய நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் கைரேகைகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles