மாலைதீவு சபாநாயகர் முகமது நஷீத்தின் சகோதரர் அகமது நஜிம் அப்துல் சத்தார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் நிர்வாகம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி தனது சகோதரரைக் கைது செய்துள்ளதாக முகமது நஷீத் குற்றம் சுமத்தியுள்ளார்.
குற்றவியல் நடைமுறைகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆளும் கூட்டணியில் உள்ள கடும்போக்கு வாதிகளை திருப்திப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இந்த சம்பத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதி செய்துள்ளதாக மாலைதீவில் உள்ள சன் செய்தி வெளியிட்டுள்ளது.
45 வயது, 35வயது மற்றும் 46 வயதுடைய மாலைதீவு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.