கடந்த 9ஆம் திகதி கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இஸ்திரிப் பெட்டியை திருடிய குற்றச்சாட்டில் கைதான நபர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் கடந்த 9ஆம் திகதி கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து இஸ்திரிப் பெட்டி ஒன்றை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அலரி மாளிகையில் இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.